Tuesday 27 December, 2011

ரகசிய எதிரி


1.தொலைபேசி

ஏனோ
நம் முத்தங்களில்
முக்கால்வாசியை
சுவைத்தது;
நம்
தொலைபேசிகள்தான்!!!!
                                                                                  
 2.எதிரி

என் அன்னையின்
எதிரி நீ....
அவள்
என் உறக்கம் கொடுக்கிறாள்
;
நீ
என் உறக்கம் கெடுக்கிறாய்!!!!!
                                                                                                                                                                       
3.இரகசியம்

நானும்
நிலவும் மட்டுமே
அறிந்த இரகசியம்
?!
உன் பிரிவின் வலி....
                                                                                                                                                                    

 4.ஸ்தம்பித்தல்


நேரங்கள் கழிகின்றன;
நாட்கள் நகர்கின்றன.,
ஏனோ
என் உலகம் மட்டும்
இயங்காமல்
;
நீ
விட்டு சென்ற இடத்தில்....!!
                                                                                  
5.தொல்லைபேசி

தொலைபேசியும்
தொல்லைபேசிதான்.....
உன்னுடன் பேசாத போது....!!!!

Monday 12 December, 2011

கொடுத்து வைத்தது



என்னை விட
கண்வலி  அதிகம்
கொடுத்து வைத்திருக்கிறது

உன் கண்ணில்
ஒரு வாரம் குடி இருந்ததே....!!!

Wednesday 7 December, 2011

கட்டித்தழுவும் கவிதை


                       
சலவைக்கு போடப் போன அம்மாவிடம் இருந்து

அவசர அவசரமாய் வாங்கினேன்; என் துப்பட்டாவை!

ஏனென்று தெரியாமல் என்னைப் பார்த்த அவளிடம்

சொல்ல இயலவில்லை .....ம் கடைசி சந்திப்பில்

அது நீ போர்த்தியது என்று!!!!!!!!!!

பாவம் அவளுக்கு எப்படி தெரியும்...?

உன் ஞாபகம் வரும் போதெல்லாம்; உனக்கு

பதிலாய் அதைத்தான் போர்த்திக்கொள்கிறேன் என்று;

ரவில் உன் நினைவுக்கு நான் இரையாகும் போதெல்லாம்;

என்கைகள் கட்டித்தழுவும் கவிதை அது என்று;

றையென பூஜைசெய்யும் அத்துப்பட்டாவை;

இரையாக்க விருப்பமில்லை சோப்பு நுரைக்கு...

என்னைத் தவிர வேறொருவரும் உணர வாய்ப்பில்லை...

சலவை செய்யாத அத்துப்பட்டாவில்

சலனம் செய்யும்;உன் வாசனையை!!!!!