Friday 23 March, 2012

விளக்கேற்ற வந்தவள்...!!!






உன் வீட்டுக்குள் நான்
அடியெடுத்து வைக்கும்
ஒவ்வொரு முறையும்;
மின்சாரம் மரணத்தை தழுவுகிறது...


ஆயிரம் பேருக்கு
அபசகுணமாய் தோன்றலாம்;
ஆனால்என் மனமோ
மகிழ்ச்சியில் மறுதழிக்கின்றது...


என் உதடுகளோ
உளறத் துடிக்கின்றது;
நாயகன் நீயும்
நாசுக்காய் சிரிக்கிறாய்...


நம் இருவருக்குமட்டும்
ஒரே உள்ளுணர்வு

"உன் வீட்டுக்கு விளக்கேற்ற வந்தவள் நான்" என்று...!!!

 

Monday 19 March, 2012

காயம்...!!!







காற்றலையும்


என்னைக் காயப்படுத்துகிறது;


உன் கோபக்குரல்...!!!


Thursday 15 March, 2012

ஒப்புமை.....!!!





காணும் போதெல்லாம் கண்டு கொள்ளாமல் செல்கிறோம்;
கூட்டத்தின் நடுவில் இருந்தால்...

பேசும் வார்த்தைகளும் விவாதங்கள் ஆகின்றன;
நண்பர்கள் நடுவில் இருந்தால்...


மோதிக்கொள்ளும் கடலின் அலைகளை
ரசிக்கும்பார்வையாளர்கள் போல;
ரசிக்கின்றனர் நம் ஊடல்களையும்!!!!



அலைகளுக்கு அடியில்
அமைதியாய் இருக்கும் மணல் போல;
மறைமுகமாக மறைந்திருக்கிறது
நம் புரிதல்களும்;
நம் மனதோடு மட்டும்!!



அகவரையில் ஆராய்ந்து பார்த்தால்;
அடிக்கடி தோன்றி மறைகின்றனர்;
ரசிகர்களுக்காக போலியாய்
போட்டி போட்டுக் கொள்ளும்
திரைப்பட நாயகர்கள்....!!!

Monday 12 March, 2012

உடன்பிறப்பு.....!!!





அன்னையின் அன்பு; தந்தையின் தாக்கம்..,
இவற்றையும் மிஞ்சியது உன் ஆதிக்கம் - என்னில்!

ஆசை ஆசையாய் அடிப்பது; அடுத்த நேரம் அன்பு செய்வது..,
இரண்டிலும் உன்னை மிஞ்ச ஆளில்லை.!

அன்னையிடம் மறைத்தது; தந்தையிடம் தயங்கியது ..,
ஒன்று விடவில்லை உன்னிடம் மட்டும்..!

யாரைப் பற்றியும் நண்பர்களிடம் சொல்லலாம்..,
அந்த நண்பர்கள் பற்றியும் உன்னிடம் சொல்லலாம்...!

நீ சொன்ன வேலையை உடனே முடிக்க ஆசைதான்..,
இருந்தாலும் உன் இரண்டு அடிகளுக்காக இழுத்தடிப்பேன்....!

நான் மட்டுமா??? நீயும் தானே !!!!

நான் கேட்டவுடன் எதையும் வாங்கித் தர விருப்பம் தான்-ஆயினும்..,
என்னைக் கெஞ்ச வைப்பதில் கொஞ்சம் ஆனந்தம்உனக்கு.....!

ஓர் வீட்டிலும் கண்டதில்லை அண்ணன் போன்ற அப்பாவை..,
ஆனால்எத்தனை வீடுகளில் அண்ணனே அப்பாவாய்......!

ஆம்அண்ணன்ஆண்டவனின் ஓர் அற்புத படைப்பு!!!!!

ஓர் அண்ணன் கிடைப்பதே உலக அதிசயம்...,
ஓரிரு அண்ணன் கிடைத்தால் நீ தான் உலகத்தின் அதிசயம்...!!!




Wednesday 7 March, 2012

கலையாதிருக்க.....




இடஞ்சலாய் இருந்தால் சொல்லிவிடு ,

நிறுத்தி விடுகிறேன்;என்

இதயத் துடிப்பையும்.... உன் தூக்கம்

கலையாதிருக்க!!!!