என் வெற்றிக்குப் பின்னும் உண்டு, ஒருவர் அல்ல இருவர் !!!
என்னை கருவாக்கியவள் அவள்; என்னை உருவாக்கியவர் அவர்...,
என் பசிதாகம் தீர்த்தவள் அவள்; என் அறிவுதாகம் தீர்த்தவர் அவர்...,
உதிரத்தை உணவாக்கியவள் அவள்; உழைப்பை உரித்தாக்கியவர் அவர்...,
பெண்ணின் மனது பெண்ணிற்கு தான் புரியும்???? ஒருவேளை
இக்கூற்று பொய்யாகலாம் என் வாழ்வில்!!!! ஆம்
என் வெற்றிக்குப் பின்னும் உண்டு ஒருவர் அல்ல இருவர்
......என் தாயும்; என் தந்தையும்.....
என்ன செய்வேன் உங்கள் இருவருக்கும் நான்???
செய்ய விழைவதை செய்வேன் இப்பிறவியில் ;
பிறப்பேன் எழுபிறவியும் உங்கள் மகளாய்.....!!!