Wednesday 11 January, 2012

இருவர்


ஒவ்வொருவர் வெற்றிக்கு பின்னும் ஒருவர் உண்டு ;

என் வெற்றிக்குப்  பின்னும் உண்டு, ஒருவர் அல்ல  இருவர் !!!

என்னை கருவாக்கியவள்  அவள்; என்னை உருவாக்கியவர் அவர்...,

என் பசிதாகம் தீர்த்தவள் அவள்; என் அறிவுதாகம் தீர்த்தவர் அவர்...,

உதிரத்தை உணவாக்கியவள் அவள்; உழைப்பை உரித்தாக்கியவர் அவர்...,

பெண்ணின் மனது பெண்ணிற்கு தான் புரியும்????  ஒருவேளை

இக்கூற்று பொய்யாகலாம் என் வாழ்வில்!!!!    ஆம்

என் வெற்றிக்குப் பின்னும் உண்டு ஒருவர் அல்ல இருவர்

......என் தாயும்; என் தந்தையும்.....

என்ன செய்வேன் உங்கள் இருவருக்கும் நான்???

செய்ய விழைவதை செய்வேன் இப்பிறவியில் ;

பிறப்பேன் எழுபிறவியும் உங்கள் மகளாய்.....!!!