Friday 20 July, 2012

இரகசிய சிநேகிதி....





எனக்கு மலர் பிடிக்கும், மழை பிடிக்கும் 
எனப் பிடித்தவை அனைத்தையும் 
தங்குதடையின்றி சொன்ன என்னிலே 
சிறு தடுமாற்றம்..!!!

முதன்முறையாய் மொழி மாற்றினேன்;
என்  சிநேகிதிக்கு உன்னை பிடிக்குமென்று!

நீ அறிவாயோ?
நானே அந்த இரகசிய சிநேகிதி என்று!!!!!

நான் மறைத்ததை அறிந்தும் அறியாதவனாய்;
தெரிந்தும் தெரியாதவனாய்; மௌனமாய் கேட்கிறாய்;
என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்குமென்று??????

உன்னை யாருக்குத்தான் பிடிக்காது என்று 
உள்ளுக்குள் தோன்றினாலும், 
உதடுகள் கூறின......
உன்னை வேறு யாருக்குப் பிடிக்க வேண்டும் 
என்னைத் தவிர!!!?

என் மனதில் புதைந்த மர்மத்தை 
அவிழ்த்த  மமதையில் 
மர்மமாய் சிரிக்கிறாய் நீ 
மன்மதனாய்!!!!!!!!!

அப்போது தான் தெரிந்தது,
எனக்கு மட்டுமல்ல; உனக்கும் நானே 
இரகசிய சிநேகிதி என்று.......!

Thursday 19 July, 2012

நீ, நான், அது.....







அன்று முதல் இன்று வரை,
ஆதி முதல் அந்தம் வரை.

அனைவரும் அருகிருக்கையிலும்,
அமைதியாய் தனிதிருக்கையிலும்.

உன் விழி பார்த்த நொடி முதல்,
என் விழி மூடும் நொடி வரை.

புது தம்பதியராய் ஜொலித்த போதிலும்,
முதிர் தம்பதியராய் திளைத்த போதிலும்.

குழந்தைக்கனவுடன் கழித்த காலத்திலும்,
குழந்தையே கனவாய் போன காலத்திலும்.

காமம் செறிந்த தருணத்தில் நம்,
மடியில் விளையாடும் குழந்தையாய்.

காயம் பட்ட தருணத்தில் நம்,
கண்ணீர் துடைக்கும் விரல்களாய்.

நாம் அடித்தாலும் சரி, அனைத்தாலும் சரி,
இறுதிவரை இருவரோடும் இணைந்து இருக்கும்.

நம் பூஜையறை, சமையலறை, படுக்கையறை என 
எங்கிலும் ஒட்டிக்கொண்டு உயிர்வாழும்,
     கடைசிவரை!!!
நம்மோடு நம் காதலும்........