எனப் பிடித்தவை அனைத்தையும்
தங்குதடையின்றி சொன்ன என்னிலே
சிறு தடுமாற்றம்..!!!
முதன்முறையாய் மொழி மாற்றினேன்;
என் சிநேகிதிக்கு உன்னை பிடிக்குமென்று!
நீ அறிவாயோ?
நானே அந்த இரகசிய சிநேகிதி என்று!!!!!
நான் மறைத்ததை அறிந்தும் அறியாதவனாய்;
தெரிந்தும் தெரியாதவனாய்; மௌனமாய் கேட்கிறாய்;
என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்குமென்று??????
உன்னை யாருக்குத்தான் பிடிக்காது என்று
உள்ளுக்குள் தோன்றினாலும்,
உதடுகள் கூறின......
உன்னை வேறு யாருக்குப் பிடிக்க வேண்டும்
என்னைத் தவிர!!!?
என் மனதில் புதைந்த மர்மத்தை
அவிழ்த்த மமதையில்
மர்மமாய் சிரிக்கிறாய் நீ
மன்மதனாய்!!!!!!!!!
அப்போது தான் தெரிந்தது,
எனக்கு மட்டுமல்ல; உனக்கும் நானே
இரகசிய சிநேகிதி என்று.......!
No comments:
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துரையிட்டு கரையேற்றுங்கள்..