Thursday 15 March, 2012

ஒப்புமை.....!!!





காணும் போதெல்லாம் கண்டு கொள்ளாமல் செல்கிறோம்;
கூட்டத்தின் நடுவில் இருந்தால்...

பேசும் வார்த்தைகளும் விவாதங்கள் ஆகின்றன;
நண்பர்கள் நடுவில் இருந்தால்...


மோதிக்கொள்ளும் கடலின் அலைகளை
ரசிக்கும்பார்வையாளர்கள் போல;
ரசிக்கின்றனர் நம் ஊடல்களையும்!!!!



அலைகளுக்கு அடியில்
அமைதியாய் இருக்கும் மணல் போல;
மறைமுகமாக மறைந்திருக்கிறது
நம் புரிதல்களும்;
நம் மனதோடு மட்டும்!!



அகவரையில் ஆராய்ந்து பார்த்தால்;
அடிக்கடி தோன்றி மறைகின்றனர்;
ரசிகர்களுக்காக போலியாய்
போட்டி போட்டுக் கொள்ளும்
திரைப்பட நாயகர்கள்....!!!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துரையிட்டு கரையேற்றுங்கள்..