சலவைக்கு போடப் போன அம்மாவிடம் இருந்து
அவசர அவசரமாய் வாங்கினேன்; என் துப்பட்டாவை!
ஏனென்று தெரியாமல் என்னைப் பார்த்த அவளிடம்
சொல்ல இயலவில்லை .....நம் கடைசி சந்திப்பில்
அது நீ போர்த்தியது என்று!!!!!!!!!!
பாவம் அவளுக்கு எப்படி தெரியும்...?
உன் ஞாபகம் வரும் போதெல்லாம்; உனக்கு
பதிலாய் அதைத்தான் போர்த்திக்கொள்கிறேன் என்று;
இரவில் உன் நினைவுக்கு நான் இரையாகும் போதெல்லாம்;
என்கைகள் கட்டித்தழுவும் கவிதை அது என்று;
இறையென பூஜைசெய்யும் அத்துப்பட்டாவை;
இரையாக்க விருப்பமில்லை சோப்பு நுரைக்கு...
என்னைத் தவிர வேறொருவரும் உணர வாய்ப்பில்லை...
சலவை செய்யாத அத்துப்பட்டாவில்
சலனம் செய்யும்;உன் வாசனையை!!!!!
9 comments:
உன் ஞாபகம் வரும் போதெல்லாம்; உனக்கு
பதிலாய் அதைத்தான் போர்த்திக்கொள்கிறேன் என்று;
அருமை தோழி .... வாழ்த்துக்கள்
- பிரகாஷ்
நன்றி தோழர் பிரகாஷ்..........
//இறையென பூஜைசெய்யும் அத்துப்பட்டாவை;
இரையாக்க விருப்பமில்லை சோப்பு நுரைக்கு...//
...ஹ்ம்ம். ரொம்ப சூப்பர். :)
//சலவை செய்யாத அத்துப்பட்டாவில்
சலனம் செய்யும் உன் வாசனையை //
...ரொம்ப ரசித்த வரிகள். தொடருங்கள். :))
கொடுத்துவைத்தவர் தான் துப்பட்டா போர்த்தியவர். நல்ல கவிதை
சலவை செய்யாத அத்துப்பட்டாவில
சலனம் செய்யும் உன் வாசனையை
>>>
காதலில் விழுந்துட்டாலே இப்படித்தான் போலும்
இருக்கலாம்........... எனக்கும் அனுபவம் இல்லை....
//இருக்கலாம்........... எனக்கும் அனுபவம் இல்லை....// அட கடவுளே! அப்படியா???!!!!
நன்றி
என்னைத் தவிர வேறொருவரும் உணர வாய்ப்பில்லை...
சலவை செய்யாத அத்துப்பட்டாவில்
சலனம் செய்யும் உன் வாசனையை
சலன்ம் ஏதும் கொள்ளாமல் இருக்க வாழ்த்துக்கள்..
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துரையிட்டு கரையேற்றுங்கள்..