Tuesday 27 December, 2011

ரகசிய எதிரி


1.தொலைபேசி

ஏனோ
நம் முத்தங்களில்
முக்கால்வாசியை
சுவைத்தது;
நம்
தொலைபேசிகள்தான்!!!!
                                                                                  
 2.எதிரி

என் அன்னையின்
எதிரி நீ....
அவள்
என் உறக்கம் கொடுக்கிறாள்
;
நீ
என் உறக்கம் கெடுக்கிறாய்!!!!!
                                                                                                                                                                       
3.இரகசியம்

நானும்
நிலவும் மட்டுமே
அறிந்த இரகசியம்
?!
உன் பிரிவின் வலி....
                                                                                                                                                                    

 4.ஸ்தம்பித்தல்


நேரங்கள் கழிகின்றன;
நாட்கள் நகர்கின்றன.,
ஏனோ
என் உலகம் மட்டும்
இயங்காமல்
;
நீ
விட்டு சென்ற இடத்தில்....!!
                                                                                  
5.தொல்லைபேசி

தொலைபேசியும்
தொல்லைபேசிதான்.....
உன்னுடன் பேசாத போது....!!!!

7 comments:

Lingesh said...

அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

சக்தி ரேவதி said...

நன்றி....

Napoo Sounthar said...

சூப்பர்..

சி.பி.செந்தில்குமார் said...

>என் உறக்கம் கொடுக்கிறாள்;
நீ
என் உறக்கம் கெடுக்கிறாய்!!!!!

கெடுத்தாலும் மேன்மக்கள் காதல் மக்களே

சக்தி ரேவதி said...

இல்லையா பின்ன.....

Marc said...

அழகான கவிதைகள்.

இராஜராஜேஸ்வரி said...

சக்தி மிக்க வரிகள்.. பாராட்டுக்கள்...

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துரையிட்டு கரையேற்றுங்கள்..