என் வெற்றிக்குப் பின்னும் உண்டு, ஒருவர் அல்ல இருவர் !!!
என்னை கருவாக்கியவள் அவள்; என்னை உருவாக்கியவர் அவர்...,
என் பசிதாகம் தீர்த்தவள் அவள்; என் அறிவுதாகம் தீர்த்தவர் அவர்...,
உதிரத்தை உணவாக்கியவள் அவள்; உழைப்பை உரித்தாக்கியவர் அவர்...,
பெண்ணின் மனது பெண்ணிற்கு தான் புரியும்???? ஒருவேளை
இக்கூற்று பொய்யாகலாம் என் வாழ்வில்!!!! ஆம்
என் வெற்றிக்குப் பின்னும் உண்டு ஒருவர் அல்ல இருவர்
......என் தாயும்; என் தந்தையும்.....
என்ன செய்வேன் உங்கள் இருவருக்கும் நான்???
செய்ய விழைவதை செய்வேன் இப்பிறவியில் ;
பிறப்பேன் எழுபிறவியும் உங்கள் மகளாய்.....!!!
6 comments:
நன்றி......
அருமை அருமை பதிவு வாழ்த்துகள்
பிறப்பேன் எழுபிறவியும் உங்கள் மகளாய்.....!!!
ஒரே வாக்கியத்தால் பெற்றோரைப் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்..
பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..
வணக்கம் நண்பரே தங்களது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.நன்றி
http://blogintamil.blogspot.in/2012/03/blog-post.html
அருமை.வாழ்த்துக்கள்.
என்ன செய்வேன் உங்கள் இருவருக்கும் நான்???
செய்ய விழைவதை செய்வேன் இப்பிறவியில் ;
முன் வரிகளில் கேள்வி அதற்கான சரியான பதில்
அருமை
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துரையிட்டு கரையேற்றுங்கள்..