Wednesday 11 January, 2012

இருவர்


ஒவ்வொருவர் வெற்றிக்கு பின்னும் ஒருவர் உண்டு ;

என் வெற்றிக்குப்  பின்னும் உண்டு, ஒருவர் அல்ல  இருவர் !!!

என்னை கருவாக்கியவள்  அவள்; என்னை உருவாக்கியவர் அவர்...,

என் பசிதாகம் தீர்த்தவள் அவள்; என் அறிவுதாகம் தீர்த்தவர் அவர்...,

உதிரத்தை உணவாக்கியவள் அவள்; உழைப்பை உரித்தாக்கியவர் அவர்...,

பெண்ணின் மனது பெண்ணிற்கு தான் புரியும்????  ஒருவேளை

இக்கூற்று பொய்யாகலாம் என் வாழ்வில்!!!!    ஆம்

என் வெற்றிக்குப் பின்னும் உண்டு ஒருவர் அல்ல இருவர்

......என் தாயும்; என் தந்தையும்.....

என்ன செய்வேன் உங்கள் இருவருக்கும் நான்???

செய்ய விழைவதை செய்வேன் இப்பிறவியில் ;

பிறப்பேன் எழுபிறவியும் உங்கள் மகளாய்.....!!!

6 comments:

சக்தி ரேவதி said...

நன்றி......

Marc said...

அருமை அருமை பதிவு வாழ்த்துகள்

இராஜராஜேஸ்வரி said...

பிறப்பேன் எழுபிறவியும் உங்கள் மகளாய்.....!!!

ஒரே வாக்கியத்தால் பெற்றோரைப் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்..

பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

வணக்கம் நண்பரே தங்களது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.நன்றி
http://blogintamil.blogspot.in/2012/03/blog-post.html

Asiya Omar said...

அருமை.வாழ்த்துக்கள்.

Tamilthotil said...

என்ன செய்வேன் உங்கள் இருவருக்கும் நான்???

செய்ய விழைவதை செய்வேன் இப்பிறவியில் ;

முன் வரிகளில் கேள்வி அதற்கான சரியான பதில்
அருமை

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துரையிட்டு கரையேற்றுங்கள்..