அன்று முதல் இன்று வரை,
ஆதி முதல் அந்தம் வரை.
அனைவரும் அருகிருக்கையிலும்,
அமைதியாய் தனிதிருக்கையிலும்.
உன் விழி பார்த்த நொடி முதல்,
என் விழி மூடும் நொடி வரை.
புது தம்பதியராய் ஜொலித்த போதிலும்,
முதிர் தம்பதியராய் திளைத்த போதிலும்.
குழந்தைக்கனவுடன் கழித்த காலத்திலும்,
குழந்தையே கனவாய் போன காலத்திலும்.
காமம் செறிந்த தருணத்தில் நம்,
மடியில் விளையாடும் குழந்தையாய்.
காயம் பட்ட தருணத்தில் நம்,
கண்ணீர் துடைக்கும் விரல்களாய்.
நாம் அடித்தாலும் சரி, அனைத்தாலும் சரி,
இறுதிவரை இருவரோடும் இணைந்து இருக்கும்.
நம் பூஜையறை, சமையலறை, படுக்கையறை என
எங்கிலும் ஒட்டிக்கொண்டு உயிர்வாழும்,
கடைசிவரை!!!
நம்மோடு நம் காதலும்........
நம்மோடு நம் காதலும்........
1 comment:
அருமை.
Post a Comment
தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துரையிட்டு கரையேற்றுங்கள்..